புதிய அனல் மின்­நி­லையம் அமைக்­கப்­படும் இடத்தில் இரும்பு துகள்­களை அள்ள குவியும் வியா­பா­ரிகள்

எண்ணுாரில், புதிய அனல்மின் நிலையம் அமையவுள்ள இடத்தை சமன்படுத்துவதற்காக, லாரி­களில் ஏற்றி வரப்­படும் மண் குவி­யல்­களி­லி­ருந்து டன் கணக்கில் இரும்பு துகள்­களை அள்­ளு­வ­தற்­காக, வியா­பா­ரிகள் குவி­கின்­றனர்.
எண்ணுார் அனல் மின்­நி­லை­யத்தை ஒட்டி, புதி­தாக அமைக்­கப்­படும் அனல்மின் நிலை­யத்தில் 600 மெகாவாட் மின்­சாரம் உற்­பத்தி செய்­யப்­பட உள்­ளது. அதற்­காக, இடம் தேர்வு செய்­யப்­பட்டு, நிலப்­ப­கு­தியை சமப்­ப­டுத்தும் பணி நடந்து வரு­கி­றது.
அதற்கு வச­தி­யாக, அனல் மின்­நிலை­யத்தை ஒட்டி குவித்து வைக்­கப்­பட்­டி­ருந்த இரும்பு துகள்கள் அடங்­கிய மண் குவியல் லாரிகள் மூலம் அங்கு கொண்டு வரப்­ப­டு­கி­றது.
அனல் மின்­நி­லையம் அமைக்கும் இடம், மிகவும் பள்­ள­மா­கவும், குள­மா­கவும் இருந்­ததால், ஒரு ஆள் உய­ரத்­திற்கு மேல், மண் நிரப்­பப்­ப­டு­கி­றது.
அந்த மணல் குவி­யலில், இரும்பு பொருட்கள், துகள்கள், டன் கணக்கில் கிடப்­ப­தாக தகவல் பரவியதால், அனல் மின்­நி­லை­யத்தின் சுற்­றுப்­ப­கு­தியில் வசிக்கும் பகு­தி­வா­சிகள் மற்றும் இரும்பு வியா­பா­ரிகள், தினமும் முற்­று­கை­இட்டு வரு­கின்­றனர்.
இதனால், எர்­ணாவூர் எர்­ணீஸ்­வரன் நக­ரி­லி­ருந்து, சுவர் உடைக்­கப்­பட்டு, அந்த வழி­யாக, வியா­பா­ரிகள் மட்­டு­மின்றி பகு­தி­வா­சி­களும் இரும்பு துகள்­களை அள்­ளு­வ­தற்கு வரிசை கட்டி வரு­கின்­றனர்.
இது­போன்ற கார­ணங்­களால், எர்­ணாவூர் எர்­ணீஸ்­வரன் நகர் மக்­க­ளுக்கும், இரும்பு துகள்­களை அள்ளும் கும்­ப­லுக்கும் வீண் தகராறு ஏற்­ப­டு­கி­றது. இது­கு­றித்து அதி­கா­ரி­களும், போலீ­சாரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்­துள்­ளது.