அவிநாசியில் உள்ள தாமரைக்குளத்தில், தினமும் 200க்கும் மேற்பட்ட லோடு மண் அள்ளப்படுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தல வரலாற்றில் தொடர்புடையது தாமரைக்குளம். 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தில், சில நாட்களாக, தினமும் 200 லோடு மண் அள்ளப்படுகிறது. நான்கு மற்றும் ஆறு வழிச்சாலை பணிக்காக, ஐ.வி. ஆர்.சி.எல்., நிறுவன லாரிகள் மூலம், மண் அள்ளப்படுகிறது.கடந்தாண்டு, தாமரைக்குளத்தில்
ஆயிரக்கணக்கான லோடு மண் அள்ளியபோது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், சேவூர் அருகே கிளாகுளத்துக்கு சென்று, மண் அள்ளப்பட்டது. தற்போது மீண் டும் தாமரைக்குளத்தில் மண் அள்ளப்படுகிறது. இதற்கு, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலெக்டர் அளித்த விதிமுறைகளை மீறி, மண் அள்ளிச் செல்வதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.அவிநாசி ஒன்றிய அகில இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:தாமரைக்குளத்தில் தினமும் நூற்றுக்
கணக்கான லோடு மண் அள்ளுவதால், குளத்தில் பல இடங்கள் மிக ஆழமாகி விட்டது. களிமண், செம்மண், வண்டல் மண் என பல வகையான மண் உள்ளது. வண்டல் மண்ணையும் தாண்டி, கிணறு தோண்டும்போது கிடைக்கும் மண் வருகிறது. அதையும் விட்டு வைக்காமல் அள்ளிச் செல்லப்படுகிறது.குளத்தை ஆழப்படுத்தினால், தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் மழுப்புகின்றனர். உண்மை அதுவல்ல; வண்டல் மண் இருந்தால், நீர் பரவுவதற்கு, அவை, மண்ணை ஊடுருவி பல இடங்களுக்குச் செல்ல எளிதாக இருக்கும். பாறை அடுக்கு வந்து, அதில் தண்ணீர் தேங்குவதால் எவ்வித பயனும் கிடையாது. மண் வளம் இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர் மேம்படும். இதுகுறித்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அழைத்து கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும், என்றார்.பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் (நொய்யல்) குமாரசாமியிடம் கேட்ட போது, ""ஆறுவழிச்சாலை பணிக்காக, அவிநாசி தாமரைக்குளத்தில் மண் அள்ள, ஐ.வி.ஆர்.சி.எல்., நிறுவனத்துக்கு கலெக்டர் அனுமதி அளித்துள் ளார். மூன்று மீ., ஆழத்துக்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும். பாறையடுக்கு வரை எடுக்கக் கூடாது. மரங்களை சேதப்படுத்தக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாங்களும் கண்காணித்து வருகிறோம். குளத்தை ஆழப்படுத்துவதால், தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.விவசாயிகள் கூறியதாவது:தாமரைக்குளத்தில் தண்ணீர் நிரம்பினால், வெளியேறுவதற்கு வழி கிடையாது. கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்து விடும். இது, அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும், மண் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. குளத்துக்கு மிக அருகில் அவிநாசி
லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மழை பெய்து, குளம் நிரம்பினால், கோவில் பாதிக்கப்படும்.குளத்தில் பரவலாக நான்கைந்து மீ., ஆழத்துக்கு, ராட்சத பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இரவு, பகலாக மண் அள்ளப்படுகிறது. தாமரைக்குளத்தில் மண் அள்ளுவதற்கு உடனே தடை விதிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் அள்ளுவது தொடர்ந்தால், லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்துவோம், என்றனர்
ஆயிரக்கணக்கான லோடு மண் அள்ளியபோது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், சேவூர் அருகே கிளாகுளத்துக்கு சென்று, மண் அள்ளப்பட்டது. தற்போது மீண் டும் தாமரைக்குளத்தில் மண் அள்ளப்படுகிறது. இதற்கு, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலெக்டர் அளித்த விதிமுறைகளை மீறி, மண் அள்ளிச் செல்வதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.அவிநாசி ஒன்றிய அகில இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:தாமரைக்குளத்தில் தினமும் நூற்றுக்
கணக்கான லோடு மண் அள்ளுவதால், குளத்தில் பல இடங்கள் மிக ஆழமாகி விட்டது. களிமண், செம்மண், வண்டல் மண் என பல வகையான மண் உள்ளது. வண்டல் மண்ணையும் தாண்டி, கிணறு தோண்டும்போது கிடைக்கும் மண் வருகிறது. அதையும் விட்டு வைக்காமல் அள்ளிச் செல்லப்படுகிறது.குளத்தை ஆழப்படுத்தினால், தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் மழுப்புகின்றனர். உண்மை அதுவல்ல; வண்டல் மண் இருந்தால், நீர் பரவுவதற்கு, அவை, மண்ணை ஊடுருவி பல இடங்களுக்குச் செல்ல எளிதாக இருக்கும். பாறை அடுக்கு வந்து, அதில் தண்ணீர் தேங்குவதால் எவ்வித பயனும் கிடையாது. மண் வளம் இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர் மேம்படும். இதுகுறித்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அழைத்து கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும், என்றார்.பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் (நொய்யல்) குமாரசாமியிடம் கேட்ட போது, ""ஆறுவழிச்சாலை பணிக்காக, அவிநாசி தாமரைக்குளத்தில் மண் அள்ள, ஐ.வி.ஆர்.சி.எல்., நிறுவனத்துக்கு கலெக்டர் அனுமதி அளித்துள் ளார். மூன்று மீ., ஆழத்துக்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும். பாறையடுக்கு வரை எடுக்கக் கூடாது. மரங்களை சேதப்படுத்தக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாங்களும் கண்காணித்து வருகிறோம். குளத்தை ஆழப்படுத்துவதால், தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.விவசாயிகள் கூறியதாவது:தாமரைக்குளத்தில் தண்ணீர் நிரம்பினால், வெளியேறுவதற்கு வழி கிடையாது. கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்து விடும். இது, அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும், மண் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. குளத்துக்கு மிக அருகில் அவிநாசி
லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மழை பெய்து, குளம் நிரம்பினால், கோவில் பாதிக்கப்படும்.குளத்தில் பரவலாக நான்கைந்து மீ., ஆழத்துக்கு, ராட்சத பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இரவு, பகலாக மண் அள்ளப்படுகிறது. தாமரைக்குளத்தில் மண் அள்ளுவதற்கு உடனே தடை விதிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் அள்ளுவது தொடர்ந்தால், லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்துவோம், என்றனர்
