கோவை - பொள்ளாச்சி ரோட்டில், "சிட்கோ' பகுதியில் உள்ள "ரயில்வே கேட்'டிற்குப் பதிலாக, புதிய ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.
கடந்த 2012 நவம்பரில் துவங்கிய இந்த பணி, வேகமாக நடந்து வருகிறது; மொத்தம் 13 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் இந்த பணிக்கு, 18 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; அடுத்த ஆண்டு மே மாதத்தில் முடிய வேண்டிய இந்த பணி, வரும் டிசம்பருக்குள் முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பாலம் கட்டி முடிக்கப்படும் வரையிலும், இந்த ரோட்டைப் பயன் படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள் ளது. அதாவது, கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் பஸ்கள், போத்தனூர் செட்டிபாளையத்தை சுற்றி ஈச்சனாரி வழியாக பொள்ளாச்சி ரோட்டில் செல்ல வேண்டுமென்றும், பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வரும் பஸ்கள், ஈச்சனாரியிலிருந்து திரும்பி மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக சுந்தராபுரத்தில் மீண்டும் கோவை ரோட்டில் செல்லலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதை சில நாட்களுக்கு மட்டும், போலீசார் நடைமுறைப்படுத்தினர். இவ்வாறு சுற்றிச் செல்வதால், தூரமும், பயண நேரமும் அதிகமாவதாக மக்கள் தரப்பில் அதிருப்தி கிளம்பியது. இதையடுத்து, தற்போதுள்ள "ரயில்வே கேட்' ரோட்டை, கோவையிலிருந்து செல்லும் பஸ்கள் ஒரு வழிப்பாதையாகப் பயன் படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று, அரசுப் போக்குவரத்துக் கழகம், தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் இணைந்து, கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.
ரயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துதுறை அதிகாரிகள் ஆகியோரிடம் கலந்தாலோசித்த பின், இதற்கான அனுமதியை வாய்மொழி உத்தரவாக மாவட்ட நிர்வாகம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கோவையிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்துமே, "ரயில்வே கேட்' அமைந்துள்ள ரோட்டில்தான் செல்கின்றன. பாலம் வேலை நடந்து வரும் சூழலில், வாகனங்கள் சென்று வருவதால், பாலம் கட்டும் பணி பாதிக்கப்படுவதோடு, அடிக்கடி "ரயில்வே கேட்'டையும் மூடித்திறக்க வேண்டியுள்ளது.
மக்கள் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ரோட்டைப் பயன் படுத்த அனுமதி வழங்கியதை உணராமல், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இந்த ரோட்டில் தினமும் "ரேஸ்' நடத்தி வருகின்றனர்.
அதிலும், இந்த "ரயில்வே கேட்'டை கடப்பதில் யார் முதல் என்பதில் கடுமையான போட்டி நடக்கிறது. நேற்று மாலை 5.30 மணியளவில், பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு இடையே "யார் முந்துவது' என்ற போட்டியில், அரசு பஸ்ஸை நிதிஷ் என்ற தனியார் பஸ் (வண்டி எண்: டிஎன் 37 பிஒய் 7943) முந்திச் சென்றது.
ரயில் வருவதற்கு மிகக்குறைவான நேரமிருக்கும் நிலையில், "ரயில்வே கேட்'டை மூடுவதற்கு அங்குள்ள பணியாளர் முயன்றபோது, தனியார் பஸ் வேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றது.
முழுமையாக "ரயில்வே கேட்'டை இறக்குவதற்குள் பஸ் வந்து விட்டதால், "கேட்'டை மூட முடியவில்லை. அதேநேரத்தில், பாலக்காட்டிலிருந்து பாசஞ்சர் ரயில், தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது. பஸ் கடப்பதைப் பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர், சற்று வேகத்தைக் குறைத்துள்ளார்.
அதற்குள், பஸ் தண்டவாளத்தைக் கடந்து விட்டது. வந்த வேகத்திலேயே ரயில் தொடர்ந்து வந்திருந்தால், பஸ்சின் மீது மோதி இருக்கும். ரயில் இன்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால், பஸ்சில் இருந்த 100 பயணிகள் உயிர் தப்பினர்.
நல்லவேளையாக, அந்த பஸ்சைத் தொடர்ந்த வாகனங்கள் எதையும் தொடர விடாமல், "கேட்கீப்பர்' எதிர் திசையில் வந்த வாகனங்களை பின்னோக்கி போகச் செய்து, இரும்பு சங்கிலியால் தடை ஏற்படுத்தியுள்ளார்.
மறுபுறம், உதவியாளர் ஒருவரும் சத்தம் போட்டு, பொதுமக்கள் தண்டவாளத்தை
கடக்காதவாறு, பார்த்துக் கொண்டார். இவர்களின் சமயோசிதம் காரணமாக, நேற்று மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த பாசஞ்சர் ரயில் கடந்த சில நிமிடங்களிலேயே,
டேங்கர் ரயில் சென்றது. ஒரு வேளை, ரயில் இன்ஜின் டிரைவர், ரயில் வேகத்தைக் குறைக்காமல் இருந்திருந்தாலோ, "கேட் கீப்பர்' வேகமாகச் செயல்பட்டு, இரும்புச் சங்கிலியால் தடை ஏற்படுத்தாமல் இருந்திந்தாலோ, நேற்று நடந்த விபரீதத்தை கற்பனை செய்திருக்கவே முடியாது.
இனியாவது, இந்த வழித்
தடத்தில் உரிய நேரத்திற்கு முன்பே, "ரயில்வே கேட்'டை மூடவும், அத்துமீறி தனியார் பஸ்கள் செல்வதைத்
தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர
அவசியம்.
கடந்த 2012 நவம்பரில் துவங்கிய இந்த பணி, வேகமாக நடந்து வருகிறது; மொத்தம் 13 கோடி ரூபாய் மதிப்பில் நடந்து வரும் இந்த பணிக்கு, 18 மாத அவகாசம் வழங்கப்பட்டுள்ளது; அடுத்த ஆண்டு மே மாதத்தில் முடிய வேண்டிய இந்த பணி, வரும் டிசம்பருக்குள் முடியுமென எதிர்பார்க்கப்படுகிறது.
பாலம் கட்டி முடிக்கப்படும் வரையிலும், இந்த ரோட்டைப் பயன் படுத்த தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள் ளது. அதாவது, கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் பஸ்கள், போத்தனூர் செட்டிபாளையத்தை சுற்றி ஈச்சனாரி வழியாக பொள்ளாச்சி ரோட்டில் செல்ல வேண்டுமென்றும், பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வரும் பஸ்கள், ஈச்சனாரியிலிருந்து திரும்பி மதுக்கரை மார்க்கெட் ரோடு வழியாக சுந்தராபுரத்தில் மீண்டும் கோவை ரோட்டில் செல்லலாம் என்றும் மாவட்ட நிர்வாகம் அறிவித்தது.
இதை சில நாட்களுக்கு மட்டும், போலீசார் நடைமுறைப்படுத்தினர். இவ்வாறு சுற்றிச் செல்வதால், தூரமும், பயண நேரமும் அதிகமாவதாக மக்கள் தரப்பில் அதிருப்தி கிளம்பியது. இதையடுத்து, தற்போதுள்ள "ரயில்வே கேட்' ரோட்டை, கோவையிலிருந்து செல்லும் பஸ்கள் ஒரு வழிப்பாதையாகப் பயன் படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டுமென்று, அரசுப் போக்குவரத்துக் கழகம், தனியார் பஸ் உரிமையாளர் சங்க நிர்வாகிகள் இணைந்து, கலெக்டருக்கு கோரிக்கை வைத்தனர்.
ரயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலைத்துறை, போக்குவரத்துதுறை அதிகாரிகள் ஆகியோரிடம் கலந்தாலோசித்த பின், இதற்கான அனுமதியை வாய்மொழி உத்தரவாக மாவட்ட நிர்வாகம் வழங்கியதாகக் கூறப்படுகிறது.
இதனால், கோவையிலிருந்து செல்லும் வாகனங்கள் அனைத்துமே, "ரயில்வே கேட்' அமைந்துள்ள ரோட்டில்தான் செல்கின்றன. பாலம் வேலை நடந்து வரும் சூழலில், வாகனங்கள் சென்று வருவதால், பாலம் கட்டும் பணி பாதிக்கப்படுவதோடு, அடிக்கடி "ரயில்வே கேட்'டையும் மூடித்திறக்க வேண்டியுள்ளது.
மக்கள் பாதிப்பைக் கருத்தில் கொண்டு, இந்த ரோட்டைப் பயன் படுத்த அனுமதி வழங்கியதை உணராமல், அரசு மற்றும் தனியார் பஸ் டிரைவர்கள் இந்த ரோட்டில் தினமும் "ரேஸ்' நடத்தி வருகின்றனர்.
அதிலும், இந்த "ரயில்வே கேட்'டை கடப்பதில் யார் முதல் என்பதில் கடுமையான போட்டி நடக்கிறது. நேற்று மாலை 5.30 மணியளவில், பொள்ளாச்சியிலிருந்து கோவைக்கு வந்து கொண்டிருந்த அரசு மற்றும் தனியார் பஸ்களுக்கு இடையே "யார் முந்துவது' என்ற போட்டியில், அரசு பஸ்ஸை நிதிஷ் என்ற தனியார் பஸ் (வண்டி எண்: டிஎன் 37 பிஒய் 7943) முந்திச் சென்றது.
ரயில் வருவதற்கு மிகக்குறைவான நேரமிருக்கும் நிலையில், "ரயில்வே கேட்'டை மூடுவதற்கு அங்குள்ள பணியாளர் முயன்றபோது, தனியார் பஸ் வேகமாக தண்டவாளத்தைக் கடக்க முயன்றது.
முழுமையாக "ரயில்வே கேட்'டை இறக்குவதற்குள் பஸ் வந்து விட்டதால், "கேட்'டை மூட முடியவில்லை. அதேநேரத்தில், பாலக்காட்டிலிருந்து பாசஞ்சர் ரயில், தண்டவாளத்தில் வேகமாக வந்து கொண்டிருந்தது. பஸ் கடப்பதைப் பார்த்த ரயில் இன்ஜின் டிரைவர், சற்று வேகத்தைக் குறைத்துள்ளார்.
அதற்குள், பஸ் தண்டவாளத்தைக் கடந்து விட்டது. வந்த வேகத்திலேயே ரயில் தொடர்ந்து வந்திருந்தால், பஸ்சின் மீது மோதி இருக்கும். ரயில் இன்ஜின் டிரைவரின் சாமர்த்தியத்தால், பஸ்சில் இருந்த 100 பயணிகள் உயிர் தப்பினர்.
நல்லவேளையாக, அந்த பஸ்சைத் தொடர்ந்த வாகனங்கள் எதையும் தொடர விடாமல், "கேட்கீப்பர்' எதிர் திசையில் வந்த வாகனங்களை பின்னோக்கி போகச் செய்து, இரும்பு சங்கிலியால் தடை ஏற்படுத்தியுள்ளார்.
மறுபுறம், உதவியாளர் ஒருவரும் சத்தம் போட்டு, பொதுமக்கள் தண்டவாளத்தை
கடக்காதவாறு, பார்த்துக் கொண்டார். இவர்களின் சமயோசிதம் காரணமாக, நேற்று மிகப்பெரிய விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
இந்த பாசஞ்சர் ரயில் கடந்த சில நிமிடங்களிலேயே,
டேங்கர் ரயில் சென்றது. ஒரு வேளை, ரயில் இன்ஜின் டிரைவர், ரயில் வேகத்தைக் குறைக்காமல் இருந்திருந்தாலோ, "கேட் கீப்பர்' வேகமாகச் செயல்பட்டு, இரும்புச் சங்கிலியால் தடை ஏற்படுத்தாமல் இருந்திந்தாலோ, நேற்று நடந்த விபரீதத்தை கற்பனை செய்திருக்கவே முடியாது.
இனியாவது, இந்த வழித்
தடத்தில் உரிய நேரத்திற்கு முன்பே, "ரயில்வே கேட்'டை மூடவும், அத்துமீறி தனியார் பஸ்கள் செல்வதைத்
தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர
அவசியம்.