தென் மாவட்டங்களில், ஜாதித் தலைவர்களின் குருபூஜையின் போது அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ரூ.2 கோடியே 5லட்சம் மதிப்பில் சேதம் விளைவிக்கப்பட்டது. பல சம்பவங்களில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்,' என, மதுரை ஐகோர்ட் கிளையில் டி.ஜி.பி., பதில் மனு செய்தார். தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்.
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்ப் புலிகள் செயலாளர் சிவகுமார் தாக்கல் செய்த மனு: சங்கரன்கோவில் நெற்கட்டும்செவலில், ஒண்டிவீரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். ஜாதித் தலைவர்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு, வாடகை வாகனங்கள்
தரக்கூடாது; மீறினால் பறிமுதல் செய்யப்படும் என ராமநாதபுரம் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். எஸ்.பி., உத்தரவை ரத்து செய்ய வேண்டும். போலீஸ் பாதுகாப்புடன் பங்கேற்க அனுமதிக்க, வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி என்.கிருபாகரன், ""மூன்று ஆண்டுகளில் ஜாதித் தலைவர்களின் குரு பூஜையின் போது பொதுச்சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம், கொலை மற்றும் பதிவான வழக்குகளை டி.ஜி.பி., தாக்கல் செய்ய வேண்டும்,'' என
உத்தரவிட்டார்.
நேற்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு
வந்தது. டி.ஜி.பி., தாக்கல் செய்த பதில் மனு: மதுரை உட்பட தென் மாவட்டங்களில் 2010 ல் 18 பேர் காயமடைந்தனர். 2011 ல் 8 பேர் (விபத்து), 7 பேர், மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்; 222 பேர் காயமுற்றனர். 2012 ல் 14 பேர் கொல்லப்பட்டு, 96 பேர் காயமுற்றனர். மூன்று ஆண்டுகளில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 336 பேர் காயமுற்றனர்.
வழக்குகள்: 2010 ல் கொலை முயற்சி 2, கலவரம் 1, கல்வீச்சு 12 மற்றும் இதர வழக்குகள் 17, மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சொத்துக்களுக்கு 23 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில் சேதம் விளைவித்தனர்.
2011 ல் கொலை முயற்சி 15, கலவரம் 4, காயம் விளைவித்தல் 5, கல்வீச்சு 85, இதரம் 40, மொத்தம் 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சொத்துக்களின் சேத மதிப்பு ஒரு கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 670 ரூபாய்.
2012 ல் கொலை 6, கொலை முயற்சி 10, கலவரம் 24, காயம் விளைவித்தல் 5, கல்வீச்சு 113, இதரம் 28, மொத்தம் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சொத்துக்களின் சேத மதிப்பு 25 லட்சத்து 42 ஆயிரத்து 701 ரூபாய்.
மொத்தம் 3 ஆண்டுகளில் 368 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்; சொத்துக்களின் சேத மதிப்பு 2 கோடியே 5 லட்சத்து ஆயிரத்து 571 ரூபாய்.
இவை மதுரை, ராமநாதபுரம், விருதுநகரில் அதிகம், என குறிப்பிட்டார். தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்
ராமநாதபுரம் மாவட்ட தமிழ்ப் புலிகள் செயலாளர் சிவகுமார் தாக்கல் செய்த மனு: சங்கரன்கோவில் நெற்கட்டும்செவலில், ஒண்டிவீரன் நினைவுநாள் நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும். ஜாதித் தலைவர்கள் சம்பந்தமான நிகழ்ச்சிகளுக்கு, வாடகை வாகனங்கள்
தரக்கூடாது; மீறினால் பறிமுதல் செய்யப்படும் என ராமநாதபுரம் எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார். எஸ்.பி., உத்தரவை ரத்து செய்ய வேண்டும். போலீஸ் பாதுகாப்புடன் பங்கேற்க அனுமதிக்க, வேண்டும், என குறிப்பிட்டார்.
நீதிபதி என்.கிருபாகரன், ""மூன்று ஆண்டுகளில் ஜாதித் தலைவர்களின் குரு பூஜையின் போது பொதுச்சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம், கொலை மற்றும் பதிவான வழக்குகளை டி.ஜி.பி., தாக்கல் செய்ய வேண்டும்,'' என
உத்தரவிட்டார்.
நேற்று இம்மனு மீண்டும் விசாரணைக்கு
வந்தது. டி.ஜி.பி., தாக்கல் செய்த பதில் மனு: மதுரை உட்பட தென் மாவட்டங்களில் 2010 ல் 18 பேர் காயமடைந்தனர். 2011 ல் 8 பேர் (விபத்து), 7 பேர், மொத்தம் 15 பேர் கொல்லப்பட்டனர்; 222 பேர் காயமுற்றனர். 2012 ல் 14 பேர் கொல்லப்பட்டு, 96 பேர் காயமுற்றனர். மூன்று ஆண்டுகளில் 29 பேர் கொல்லப்பட்டுள்ளனர்; 336 பேர் காயமுற்றனர்.
வழக்குகள்: 2010 ல் கொலை முயற்சி 2, கலவரம் 1, கல்வீச்சு 12 மற்றும் இதர வழக்குகள் 17, மொத்தம் 32 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சொத்துக்களுக்கு 23 ஆயிரத்து 200 ரூபாய் மதிப்பில் சேதம் விளைவித்தனர்.
2011 ல் கொலை முயற்சி 15, கலவரம் 4, காயம் விளைவித்தல் 5, கல்வீச்சு 85, இதரம் 40, மொத்தம் 149 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சொத்துக்களின் சேத மதிப்பு ஒரு கோடியே 79 லட்சத்து 35 ஆயிரத்து 670 ரூபாய்.
2012 ல் கொலை 6, கொலை முயற்சி 10, கலவரம் 24, காயம் விளைவித்தல் 5, கல்வீச்சு 113, இதரம் 28, மொத்தம் 187 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. சொத்துக்களின் சேத மதிப்பு 25 லட்சத்து 42 ஆயிரத்து 701 ரூபாய்.
மொத்தம் 3 ஆண்டுகளில் 368 வழக்குகள் பதிவு செய்துள்ளனர்; சொத்துக்களின் சேத மதிப்பு 2 கோடியே 5 லட்சத்து ஆயிரத்து 571 ரூபாய்.
இவை மதுரை, ராமநாதபுரம், விருதுநகரில் அதிகம், என குறிப்பிட்டார். தீர்ப்பை நீதிபதி தள்ளிவைத்தார்