இயற்கை உரம் கிடைக்காமல் திண்டாடும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இயற்கையான அங்கக உரம் கிடைத்துள்ளது. கடலில் வளர்க்கப்படும் செயற்கை பாசியில் இருந்து இந்த உரம் தயாரிக்கப் படுகிறது.நாட்டில் மக்கள் பலர் அரிசியையே முக்கிய உணவாக கொண்டு வாழ்கின்றனர். நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள கால கட்டத்தில் உணவு உற்பத்தியை பெருக்குவது விவசாயிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் நிலத்தின் வளம் சீர்கேடு அடைந்துள்ளது. இதனை சரிசெய்ய இயற்கை உரங்களான தொழு உரம், பசுந்தாள் உரங்கள் மற்றும் இதர வேளாண் கழிவுப் பொருட்கள் கிடைக்காத நிலை உள்ளது.
புதிய அங்கக உரம்
இயற்கை உரங்கள் காணாமல் போனதால், விவசாயிகளுக்கு இயற்கை யாக கிடைக்கும் வகையில் ஒருஅங்கக உரம் கண்டறியப்பட்டுள்ளது. கடலில் வளரும் செயற்கை பாசியில் இருந்து முழுமையான அங்கக உரம் தயாரிக்கப்படுகிறது.இந்த உரத்தை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உப்பு மற்றும் கடல்சார்ந்த ரசாயன ஆராய்ச்சி மையம், கண்டறிந்து உலக காப்புரிமை பெற்றுள்ளது.இந்த கண்டுபிடிப்பை பல்வேறு பயிர்களில், பல்வேறு மண் வகைகளில் 20 மாநிலங்களில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலை யங்களில் பரிசோதித்தனர். இதன் மூலம் அனைத்து விதமான பயிர்களிலும் அதிக மகசூல் கிடைப்பதுடன், தரம் உயர்ந்த விளைபொருள் உற்பத்தியாவதும் நிரூபிக்கப் பட்டது.
"ஜெல்" வடிவில் உரம்
இந்த கடற்பாசி உரத்தொழில் நுட்பத்தை ஸ்கைவின் பயோ டெக் என்ற நிறுவனம் காப்புரிமை பெற்று, உரத்தின் வீரி யத்தை அதிகப்படுத்தும் வகையில் நெல்பயிருக்கு உகந்த அங்கக இடுபொருளை உற்பத்தி செய்கிறது.இதற்காக அங்கக மற்றும் பயோ பொருட்களை ஆராய்ச்சியின் அடிப்படையில் உள்ளடக்கிய "டீய்ப் ஜெல்' என்ற புதிய ஜெல் வடிவிலான இடுபொருளை வடிவமைத்துள்ளது.கூடுதல் நன்மைகள் இந்த அங்கக உரத்தில், சுற்றுப் புறச் சூழலை மாசுபடுத்தாத அனைத்து ஊட்டங்களும் இடம் பெற்றுள்ளது. பயிர்களின் வேர்கள் ஆழமாகவும், அடர்ந்தும் வளர்வதால் ஊட்டச் சத்துக்கள் மற்றும் தண்ணீர் அதிகளவில் உள்கிரகிக்கப்படுகிறது.உபயோகிக்கும் முறைஒரு ஏக்கருக்கு டீய்ப் ஜெல் 5 கிலோ மற்றும் மக்கிய தொழு உரத்தை 20 கிலோ மணலுடன் நன்கு கலந்து வயல்களில் சீராக தண்ணீர் (2.5 செ.மீ.,) வைத்து, நடவு செய்த 10 நாட்களுக்குள் இட வேண்டும். இத்துடன் 10 கிலோ சன்மேக் நுண்ணூட்டத்தையும் கலந்து இட வேண்டும்.சாதனை விவசாயி:விக்கிரவாண்டி அருகே பயிர் சாகுபடிக்கு சவாலாக விளங்கிய தனது நிலத்தில் நெல் பயிரிட்டு, அமோக விளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன், தனது நிலத்தில், புதிய முயற்சியாக இயற்கை அங்கக உரத்தைப் பயன்படுத்தி ஏ.எஸ்.-36 ரக நெல் பயிரிட்டார். நடவு செய்த 10 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயோ சக்தி குருணை மற்றும் 10 கிலோ மைக்ரோ கோல்டு நுண்ணூட்ட உரத்தை கலந்து நெல் வயலில் பயன்படுத்தினார்.அடுத்த சில நாட்களில் நெற்பயிர் கரும்பச்சை நிறத் துடன், அதிக தூர்களுடன் செழித்து வளர்ந்தது. பரீட்சார்த்த முறையில் ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்த அவர், இதனைக் கண்டு ஆச்சரியமடைந்தார். மேலும் தனது 9 ஏக்கரிலும் நெல் பயிரை தெம் புடன் சாகுபடி செய்துள்ளார்.மணக்கும் மல்லிகை பனையபுரம் அடுத்த விஸ்வரெட்டிப்பாளையம் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங், முருகன், வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, பாலு, நாராயணன் உள்ளிட்ட விவசாயிகள் நீண்ட காலமாக இயற்கை அங்கக உரங்களை பயன்படுத்தி பூக்கள் பயிரிட்டுள்ளனர். இதில் கூடுதல் மகசூல் மற்றும் அதிக லாபம் கிடைக்கிறது என தெரிவித்துள்ளனர்
புதிய அங்கக உரம்
இயற்கை உரங்கள் காணாமல் போனதால், விவசாயிகளுக்கு இயற்கை யாக கிடைக்கும் வகையில் ஒருஅங்கக உரம் கண்டறியப்பட்டுள்ளது. கடலில் வளரும் செயற்கை பாசியில் இருந்து முழுமையான அங்கக உரம் தயாரிக்கப்படுகிறது.இந்த உரத்தை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உப்பு மற்றும் கடல்சார்ந்த ரசாயன ஆராய்ச்சி மையம், கண்டறிந்து உலக காப்புரிமை பெற்றுள்ளது.இந்த கண்டுபிடிப்பை பல்வேறு பயிர்களில், பல்வேறு மண் வகைகளில் 20 மாநிலங்களில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலை யங்களில் பரிசோதித்தனர். இதன் மூலம் அனைத்து விதமான பயிர்களிலும் அதிக மகசூல் கிடைப்பதுடன், தரம் உயர்ந்த விளைபொருள் உற்பத்தியாவதும் நிரூபிக்கப் பட்டது.
"ஜெல்" வடிவில் உரம்
இந்த கடற்பாசி உரத்தொழில் நுட்பத்தை ஸ்கைவின் பயோ டெக் என்ற நிறுவனம் காப்புரிமை பெற்று, உரத்தின் வீரி யத்தை அதிகப்படுத்தும் வகையில் நெல்பயிருக்கு உகந்த அங்கக இடுபொருளை உற்பத்தி செய்கிறது.இதற்காக அங்கக மற்றும் பயோ பொருட்களை ஆராய்ச்சியின் அடிப்படையில் உள்ளடக்கிய "டீய்ப் ஜெல்' என்ற புதிய ஜெல் வடிவிலான இடுபொருளை வடிவமைத்துள்ளது.கூடுதல் நன்மைகள் இந்த அங்கக உரத்தில், சுற்றுப் புறச் சூழலை மாசுபடுத்தாத அனைத்து ஊட்டங்களும் இடம் பெற்றுள்ளது. பயிர்களின் வேர்கள் ஆழமாகவும், அடர்ந்தும் வளர்வதால் ஊட்டச் சத்துக்கள் மற்றும் தண்ணீர் அதிகளவில் உள்கிரகிக்கப்படுகிறது.உபயோகிக்கும் முறைஒரு ஏக்கருக்கு டீய்ப் ஜெல் 5 கிலோ மற்றும் மக்கிய தொழு உரத்தை 20 கிலோ மணலுடன் நன்கு கலந்து வயல்களில் சீராக தண்ணீர் (2.5 செ.மீ.,) வைத்து, நடவு செய்த 10 நாட்களுக்குள் இட வேண்டும். இத்துடன் 10 கிலோ சன்மேக் நுண்ணூட்டத்தையும் கலந்து இட வேண்டும்.சாதனை விவசாயி:விக்கிரவாண்டி அருகே பயிர் சாகுபடிக்கு சவாலாக விளங்கிய தனது நிலத்தில் நெல் பயிரிட்டு, அமோக விளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன், தனது நிலத்தில், புதிய முயற்சியாக இயற்கை அங்கக உரத்தைப் பயன்படுத்தி ஏ.எஸ்.-36 ரக நெல் பயிரிட்டார். நடவு செய்த 10 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயோ சக்தி குருணை மற்றும் 10 கிலோ மைக்ரோ கோல்டு நுண்ணூட்ட உரத்தை கலந்து நெல் வயலில் பயன்படுத்தினார்.அடுத்த சில நாட்களில் நெற்பயிர் கரும்பச்சை நிறத் துடன், அதிக தூர்களுடன் செழித்து வளர்ந்தது. பரீட்சார்த்த முறையில் ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்த அவர், இதனைக் கண்டு ஆச்சரியமடைந்தார். மேலும் தனது 9 ஏக்கரிலும் நெல் பயிரை தெம் புடன் சாகுபடி செய்துள்ளார்.மணக்கும் மல்லிகை பனையபுரம் அடுத்த விஸ்வரெட்டிப்பாளையம் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங், முருகன், வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, பாலு, நாராயணன் உள்ளிட்ட விவசாயிகள் நீண்ட காலமாக இயற்கை அங்கக உரங்களை பயன்படுத்தி பூக்கள் பயிரிட்டுள்ளனர். இதில் கூடுதல் மகசூல் மற்றும் அதிக லாபம் கிடைக்கிறது என தெரிவித்துள்ளனர்