போத்தனூர் "யார்டு' சீரமைப்புப் பணி முடிவடைந்தபின்னும், 8 ரயில்கள் கோவைக்கு வராமல் கேரளா செல்கின்றன.கோவை வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்களில், 13 ரயில்கள் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வராமல், போத்தனூர் வழியாக இயக்கப்பட்டு வந்தன. வடகோவை-இருகூர் இடையில் இருவழிப்பாதை இல்லாததைக் காரணம் காட்டி, கோவைக்கு வந்தால் "சிக்னல்' கிடைக்காமல் மிகவும் தாமதமாகும் என்பதன் காரணமாகவே அந்த ரயில்கள் அனைத்தும், இருகூர்-போத்தனூர் வழியாக கேரளாவுக்குச் சென்றன.
வடகோவை-இருகூர் இடையிலான இருவழிப்பாதை அமைக்கும் பணி, கடந்த 2010 ஆகஸ்ட்டிலேயே முடிவடைந்து விட்டது.அதன்பின்னும், இந்த ரயில்கள் அனைத்தும் கோவைக்குள் திருப்பப்படாமல், போத்தனூர் வழியாகவே இயக்கப்பட்டன. இதனைக் கண்டித்து, கோவை ரயில்வே போராட்டக்குழு உருவாக்கப்பட்டது; இந்த குழுவினர் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, இதுவரையிலும் 4 ரயில்கள் மட்டும் கோவைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஐந்தாவது ரயிலாக, மங்களூரு- புதுச்சேரி வாராந்திர ரயில் (வண்டி எண்:16857/58), வரும் 7ம் தேதியிலிருந்து கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக இயக்கப்படுவதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரலில், கோவைக்கு வந்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா, "போத்தனூரில் "யார்டு' பணிகள் முடிந்த பின்பே, மீதமுள்ள ரயில்களை கோவைக்கு திருப்புவது பற்றி முடிவு எடுக்க முடியும்,' என்றார். அதன்படி, கடந்த மாதம் 25ம் தேதியன்றே இந்த பணிகள் முடிவடைந்தன. ஆனால், இன்னும் 8 ரயில்களை கோவைக்குத் திருப்புவது பற்றி, ரயில்வே நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. தற்போது, திருப்பி விடப்பட்டுள்ள 5 ரயில்களில் சென்னை-ஆழப்புழா ரயில் மட்டுமே, தினசரி ரயிலாகும். திருவனந்தபுரம்-பிலாஸ்பூர், மும்பை-திருவனந்தபுரம், மங்களூரு-புதுச்சேரி (வழி:சேலம்), மங்களூரு-புதுச்சேரி (வழி:திருச்சி) ஆகிய 4 ரயில்களும், வாராந்திர ரயில்களாகும். இவற்றில், யஷ்வந்த்பூர் -கண்ணனூர் இடையே இயக்கப்படும் தினசரி ரயில் கோவைக்குத் திருப்பப்பட்டால், பெங்களூருவுக்கு "ஆம்னி' பஸ்களில் அநியாயக்கட்டணம் கொடுத்து, ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் பல ஆயிரும் பேரும் தப்பிப்பார்கள்.சென்னைக்கும் தினமும் கூடுதலாக 3 ரயில்கள் கிடைக்கும் என்பதால், சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கையும் பாதியாகக் குறையும்; ஆனால், போத்தனூர் "யார்டு' பணி முடிவடைந்த பின்னும், இந்த ரயில்களைத் திருப்புவது பற்றி, ரயில்வே நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது, கோவை மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், "ஆம்னி' பஸ் உரிமையாளர்களுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையிலான "ரகசிய ஒப்பந்தம்' காரணமா என்ற கேள்வி, கோவை மக்களிடம் எழுந்துள்ளது; ரயில்வே அதிகாரிகளின் அடுத்த கட்ட நடவடிக்கையே இதற்கு விடை கொடுக்கும்.
"டாட்டா' காட்டும் எட்டு இவைதான்!
1.யஷ்வந்த்பூர்-கண்ணனூர் எக்ஸ்பிரஸ் (தினசரி)
2.சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் (தினசரி)
3.ஹூப்ளி-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
4.சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
5.பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வாரமிருமுறை)
6.பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
7.சென்னை-திருவனந்தபுரம் மெயில் (தினசரி)
8.சென்னை-மங்களூரு மெயில் (தினசரி)
இவற்றில், சென்னை-திருவனந்தபுரம் மெயில் (வண்டி எண்: 12623/24) போத்தனூரிலும் நிற்பதில்லை; ஈரோட்டுக்கு அடுத்ததாக பாலக்காட்டில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. இடையிலுள்ள கோவை, திருப்பூர் என்ற இரு பெரும் நகரங்களுக்கும் இந்த ரயில் "டாட்டா' காட்டிச் செல்கிறது
வடகோவை-இருகூர் இடையிலான இருவழிப்பாதை அமைக்கும் பணி, கடந்த 2010 ஆகஸ்ட்டிலேயே முடிவடைந்து விட்டது.அதன்பின்னும், இந்த ரயில்கள் அனைத்தும் கோவைக்குள் திருப்பப்படாமல், போத்தனூர் வழியாகவே இயக்கப்பட்டன. இதனைக் கண்டித்து, கோவை ரயில்வே போராட்டக்குழு உருவாக்கப்பட்டது; இந்த குழுவினர் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, இதுவரையிலும் 4 ரயில்கள் மட்டும் கோவைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஐந்தாவது ரயிலாக, மங்களூரு- புதுச்சேரி வாராந்திர ரயில் (வண்டி எண்:16857/58), வரும் 7ம் தேதியிலிருந்து கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக இயக்கப்படுவதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரலில், கோவைக்கு வந்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா, "போத்தனூரில் "யார்டு' பணிகள் முடிந்த பின்பே, மீதமுள்ள ரயில்களை கோவைக்கு திருப்புவது பற்றி முடிவு எடுக்க முடியும்,' என்றார். அதன்படி, கடந்த மாதம் 25ம் தேதியன்றே இந்த பணிகள் முடிவடைந்தன. ஆனால், இன்னும் 8 ரயில்களை கோவைக்குத் திருப்புவது பற்றி, ரயில்வே நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. தற்போது, திருப்பி விடப்பட்டுள்ள 5 ரயில்களில் சென்னை-ஆழப்புழா ரயில் மட்டுமே, தினசரி ரயிலாகும். திருவனந்தபுரம்-பிலாஸ்பூர், மும்பை-திருவனந்தபுரம், மங்களூரு-புதுச்சேரி (வழி:சேலம்), மங்களூரு-புதுச்சேரி (வழி:திருச்சி) ஆகிய 4 ரயில்களும், வாராந்திர ரயில்களாகும். இவற்றில், யஷ்வந்த்பூர் -கண்ணனூர் இடையே இயக்கப்படும் தினசரி ரயில் கோவைக்குத் திருப்பப்பட்டால், பெங்களூருவுக்கு "ஆம்னி' பஸ்களில் அநியாயக்கட்டணம் கொடுத்து, ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் பல ஆயிரும் பேரும் தப்பிப்பார்கள்.சென்னைக்கும் தினமும் கூடுதலாக 3 ரயில்கள் கிடைக்கும் என்பதால், சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கையும் பாதியாகக் குறையும்; ஆனால், போத்தனூர் "யார்டு' பணி முடிவடைந்த பின்னும், இந்த ரயில்களைத் திருப்புவது பற்றி, ரயில்வே நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது, கோவை மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், "ஆம்னி' பஸ் உரிமையாளர்களுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையிலான "ரகசிய ஒப்பந்தம்' காரணமா என்ற கேள்வி, கோவை மக்களிடம் எழுந்துள்ளது; ரயில்வே அதிகாரிகளின் அடுத்த கட்ட நடவடிக்கையே இதற்கு விடை கொடுக்கும்.
"டாட்டா' காட்டும் எட்டு இவைதான்!
1.யஷ்வந்த்பூர்-கண்ணனூர் எக்ஸ்பிரஸ் (தினசரி)
2.சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் (தினசரி)
3.ஹூப்ளி-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
4.சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
5.பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வாரமிருமுறை)
6.பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
7.சென்னை-திருவனந்தபுரம் மெயில் (தினசரி)
8.சென்னை-மங்களூரு மெயில் (தினசரி)
இவற்றில், சென்னை-திருவனந்தபுரம் மெயில் (வண்டி எண்: 12623/24) போத்தனூரிலும் நிற்பதில்லை; ஈரோட்டுக்கு அடுத்ததாக பாலக்காட்டில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. இடையிலுள்ள கோவை, திருப்பூர் என்ற இரு பெரும் நகரங்களுக்கும் இந்த ரயில் "டாட்டா' காட்டிச் செல்கிறது
