தினமும் 500 கிராம் காய், பழம் சாப்­பி­டுங்கள் சத்­து­ணவு வார விழாவில் டாக்டர் அறி­வுரை

:தினமும், 500 கிராம் புதிய காய்­க­றிகள், பழங்­களை, மூன்று வேளையும் சரி­வி­கித அள­வாக 
உட்­கொள்ள வேண்டும்’ என, சத்­து­ணவு வார விழாவில் மருத்துவர்கள் அறி­வு­றுத்­தினர்.
சென்னை, எழும்பூர் அரசு மகப்­பேறு மருத்­து­வ­ம­னையில், சத்­து­ணவு வார விழா நேற்று கொண்­டா­டப்­பட்­டது. இதில், 200க்கும் பெண்கள் பங்­கேற்­றனர். அவர்­க­ளுக்கு சத்­து­ணவின் அவ­சியம் குறித்து, மருத்துவர்கள் விளக்கம் அளித்­தனர்.
சென்னை மருத்­து­வ­மனை டீன் கன­க­சபை பேசி­ய­தா­வது:
தொற்­று நோய் வராமல் தடுக்க, சத்­து­ணவு முக்­கியம். 
கர்ப்ப காலத்தில் சத்­து­ணவு
அவ­சியம். ரத்த சோகையை தடுக்க தேவை­யான இரும்­
புச்­சத்து, முருங்கைக் கீரை,
முருங்­கைக்காய், எலு­மிச்சை, ஆரஞ்சு, பால் 
சாப்­பி­டு­வதால் கிடைக்கும்.
தினமும், 500 கிராம் காய்­கறி, பழங்­களை சாப்­பி­டு­வது நல்­லது. அதை மூன்று வேளையும், சரி­வி­கித அளவில் சாப்­பிட வேண்டும்.
இவ்­வாறு அவர் 
தெரி­வித்தார்.
‘அரிசி, சர்க்­கரை, உப்பு, எண்ணெய், தயிர் போன்­ற ­வற்றை அதிகம் சாப்­பிட
கூடாது. தினமும், உடற்­
ப­யிற்­சியும் முக்­கியம். தியானம், சரி­யான துாக்கம்
நோய்கள் வரத்தை தடுக்கும்’
எனவும், மருத்துவர்கள் வலி­யு­றுத்­தினர்