தெரு பெயரை கடன் வாங்கும் மக்கள் விசித்­திரம்! 22 ஆண்டு கோரிக்கை நிறை­வே­றுமா?

ஆலந்துார் பகு­தியில், 22 ஆண்­டு­க­ளாக ஒரு தெரு­வுக்கு பெயர் சூட்டப்­ப­ட­வில்லை. அதனால், பக்­கத்து தெருக்­களின் பெயர்­களை கடன் வாங்கி பயன்­ப­டுத்தி வரும் 11 குடும்­பங்கள் பல்­வேறு இன்­னல்­களில் சிக்கி தவிக்­கின்­றனர். இது­கு­றித்து முதல்வர் தனிப்­பி­ரி­வுக்கு அனுப்­பப்­பட்ட மனு­வுக்கு, மாந­க­ராட்சி சரி­யான பதில் அளிக்­க­வில்லை என, பகு­தி­வாசிகள் 
குற்­றம்­சாட்­டு­கின்­றனர்.
மாந­க­ராட்சி, 165வது வார்டு, சரஸ்­வதி தெரு மற்றும் பாலாறு தெரு அருகில், 30 அடி அகலம், 300 அடி நீளம் கொண்ட ஒரு தெரு உள்­ளது. அங்கு, 11 வீடுகள் உள்­ளன. அந்த தெரு­வுக்கு பெயர் இல்லை.
குழப்பம்
அதனால், அந்த தெருவில் உள்ள ஐந்து வீடு­களை சேர்ந்தோர், அவர்­க­ளுக்கு பக்­கத்து தெரு­வான சரஸ்­வதி தெரு பெய­ரையும், மீதி ஆறு வீடு­களை சேர்ந்தோர், அவர்­க­ளுக்கு அடுத்­துள்ள பாலாறு தெரு பெய­ரையும் பயன்­ப­டுத்தி, சொத்து வரி, குடிநீர் வரி, கழி­வுநீர் வரி, மின்­வா­ரிய கட்­டணம் போன்­ற­வற்றை செலுத்தி வரு­கின்­றனர்.
அந்த, 11 வீடு­களின் முகவரிக்கு, கூரியர், கால் டாக்சி மற்றும் ‘டோர்’ டெலி­வரி பொருட்கள் கொண்டு செல்வோர், சரஸ்வதி மற்றும் பாலாறு தெருக்­களில் வீட்டு எண்­களை தேடி­விட்டு ‘தவ­றான முக­வரி’ என, 
திரும்பி சென்று விடு­கின்­றனர்.
மேலும், குடும்ப அட்டை, பாஸ்போர்ட் விண்­ணப்பம் குறித்த உண்மை தகவல் அறிய செல்லும் அதி­கா­ரி­களும், ஒரே தெருவில் உள்ள வீடுகள், இரண்டு தெரு பெயர்­களை பயன்­ப­டுத்­து­வதை பார்த்து குழப்பம் அடை­கின்­றனர். இதனால், பகு­தி­வா­சிகள் பல்­வேறு இன்­னல்­க­ளுக்கு ஆளாகி 
வரு­கின்­றனர்.
இது­போன்ற சிக்­கல்­களை களைய அந்த தெரு­வுக்கு தனி பெயர் சூட்ட வேண்டும் 
என, பகு­தி­வா­சிகள் கோரிக்கை விடுத்­தனர். அதை­ய­டுத்து, ஆலந்துார் நக­ராட்­சி­யாக இருந்­த­போது, 1999ல், ‘பிரம்­ம­புத்­திரா தெரு’ என, பெயர் சூட்ட, மன்ற கூட்­டத்தில் தீர்­மானம் நிறை­வேற்­றப்­பட்டு, அர­சுக்கு அனுப்­பப்­பட்­டது. மீண்டும், 2010ல், நக­ராட்சி சார்பில் அர­சுக்கு நினை­வூட்டல் கடிதம் அனுப்­பப்­பட்­டது.
முதல்­வரின் தனிப்­பி­ரி­வுக்கும் மனு அனுப்­பப்­பட்­டது. தனிப்­பி­ரிவில் இருந்து அந்த மனு, மாந­க­ராட்­சிக்கு அனுப்­பப்­பட்­டது. மனுவில் விவ­ரங்கள் குழப்­ப­மாக இருப்­பதால், மனுவை நிரா­க­ரித்து விட்­ட­தாக மாந­க­ராட்சி பதில் அனுப்­பி­யது.
என்ன ஆனது?
இது­கு­றித்து, 84 வய­தான பகு­தி­வாசி வர­தாச்­சாரி கூறி­ய­தா­வது:
முதல்­வ­ருக்கு அனுப்­பிய மனுவை அதி­கா­ரிகள் தெளி­வாக படித்து பார்க்­காமல் பதில் கடிதம் எழுதி உள்­ளனர். ஆலந்துார் 
நக­ராட்­சியில் நிறை­வேற்­றப்­பட்ட தீர்­மானம் என்ன ஆனது என, தெரி­ய­வில்லை.
இவ்­வாறு அவர் கூறினார்.
மாந­க­ராட்சி அதி­கா­ரி­க­ளிடம் கேட்­ட­போது, ‘முதல்வர் தனிப்­பி­ரிவு மனு­வுக்கு பதில் கடிதம் எழு­தி­யதில் தவறு எங்கு
நடந்­தது என, தெரி­ய­வில்லை. விசா­ரணை செய்து நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்’ என்­றனர்.