ஆலந்துார் பகுதியில், 22 ஆண்டுகளாக ஒரு தெருவுக்கு பெயர் சூட்டப்படவில்லை. அதனால், பக்கத்து தெருக்களின் பெயர்களை கடன் வாங்கி பயன்படுத்தி வரும் 11 குடும்பங்கள் பல்வேறு இன்னல்களில் சிக்கி தவிக்கின்றனர். இதுகுறித்து முதல்வர் தனிப்பிரிவுக்கு அனுப்பப்பட்ட மனுவுக்கு, மாநகராட்சி சரியான பதில் அளிக்கவில்லை என, பகுதிவாசிகள்
குற்றம்சாட்டுகின்றனர்.
மாநகராட்சி, 165வது வார்டு, சரஸ்வதி தெரு மற்றும் பாலாறு தெரு அருகில், 30 அடி அகலம், 300 அடி நீளம் கொண்ட ஒரு தெரு உள்ளது. அங்கு, 11 வீடுகள் உள்ளன. அந்த தெருவுக்கு பெயர் இல்லை.
குழப்பம்
அதனால், அந்த தெருவில் உள்ள ஐந்து வீடுகளை சேர்ந்தோர், அவர்களுக்கு பக்கத்து தெருவான சரஸ்வதி தெரு பெயரையும், மீதி ஆறு வீடுகளை சேர்ந்தோர், அவர்களுக்கு அடுத்துள்ள பாலாறு தெரு பெயரையும் பயன்படுத்தி, சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி, மின்வாரிய கட்டணம் போன்றவற்றை செலுத்தி வருகின்றனர்.
அந்த, 11 வீடுகளின் முகவரிக்கு, கூரியர், கால் டாக்சி மற்றும் ‘டோர்’ டெலிவரி பொருட்கள் கொண்டு செல்வோர், சரஸ்வதி மற்றும் பாலாறு தெருக்களில் வீட்டு எண்களை தேடிவிட்டு ‘தவறான முகவரி’ என,
திரும்பி சென்று விடுகின்றனர்.
மேலும், குடும்ப அட்டை, பாஸ்போர்ட் விண்ணப்பம் குறித்த உண்மை தகவல் அறிய செல்லும் அதிகாரிகளும், ஒரே தெருவில் உள்ள வீடுகள், இரண்டு தெரு பெயர்களை பயன்படுத்துவதை பார்த்து குழப்பம் அடைகின்றனர். இதனால், பகுதிவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி
வருகின்றனர்.
இதுபோன்ற சிக்கல்களை களைய அந்த தெருவுக்கு தனி பெயர் சூட்ட வேண்டும்
என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, ஆலந்துார் நகராட்சியாக இருந்தபோது, 1999ல், ‘பிரம்மபுத்திரா தெரு’ என, பெயர் சூட்ட, மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது. மீண்டும், 2010ல், நகராட்சி சார்பில் அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பப்பட்டது. தனிப்பிரிவில் இருந்து அந்த மனு, மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டது. மனுவில் விவரங்கள் குழப்பமாக இருப்பதால், மனுவை நிராகரித்து விட்டதாக மாநகராட்சி பதில் அனுப்பியது.
என்ன ஆனது?
இதுகுறித்து, 84 வயதான பகுதிவாசி வரதாச்சாரி கூறியதாவது:
முதல்வருக்கு அனுப்பிய மனுவை அதிகாரிகள் தெளிவாக படித்து பார்க்காமல் பதில் கடிதம் எழுதி உள்ளனர். ஆலந்துார்
நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது என, தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முதல்வர் தனிப்பிரிவு மனுவுக்கு பதில் கடிதம் எழுதியதில் தவறு எங்கு
நடந்தது என, தெரியவில்லை. விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.
குற்றம்சாட்டுகின்றனர்.
மாநகராட்சி, 165வது வார்டு, சரஸ்வதி தெரு மற்றும் பாலாறு தெரு அருகில், 30 அடி அகலம், 300 அடி நீளம் கொண்ட ஒரு தெரு உள்ளது. அங்கு, 11 வீடுகள் உள்ளன. அந்த தெருவுக்கு பெயர் இல்லை.
குழப்பம்
அதனால், அந்த தெருவில் உள்ள ஐந்து வீடுகளை சேர்ந்தோர், அவர்களுக்கு பக்கத்து தெருவான சரஸ்வதி தெரு பெயரையும், மீதி ஆறு வீடுகளை சேர்ந்தோர், அவர்களுக்கு அடுத்துள்ள பாலாறு தெரு பெயரையும் பயன்படுத்தி, சொத்து வரி, குடிநீர் வரி, கழிவுநீர் வரி, மின்வாரிய கட்டணம் போன்றவற்றை செலுத்தி வருகின்றனர்.
அந்த, 11 வீடுகளின் முகவரிக்கு, கூரியர், கால் டாக்சி மற்றும் ‘டோர்’ டெலிவரி பொருட்கள் கொண்டு செல்வோர், சரஸ்வதி மற்றும் பாலாறு தெருக்களில் வீட்டு எண்களை தேடிவிட்டு ‘தவறான முகவரி’ என,
திரும்பி சென்று விடுகின்றனர்.
மேலும், குடும்ப அட்டை, பாஸ்போர்ட் விண்ணப்பம் குறித்த உண்மை தகவல் அறிய செல்லும் அதிகாரிகளும், ஒரே தெருவில் உள்ள வீடுகள், இரண்டு தெரு பெயர்களை பயன்படுத்துவதை பார்த்து குழப்பம் அடைகின்றனர். இதனால், பகுதிவாசிகள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி
வருகின்றனர்.
இதுபோன்ற சிக்கல்களை களைய அந்த தெருவுக்கு தனி பெயர் சூட்ட வேண்டும்
என, பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்தனர். அதையடுத்து, ஆலந்துார் நகராட்சியாக இருந்தபோது, 1999ல், ‘பிரம்மபுத்திரா தெரு’ என, பெயர் சூட்ட, மன்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அரசுக்கு அனுப்பப்பட்டது. மீண்டும், 2010ல், நகராட்சி சார்பில் அரசுக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பப்பட்டது.
முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அனுப்பப்பட்டது. தனிப்பிரிவில் இருந்து அந்த மனு, மாநகராட்சிக்கு அனுப்பப்பட்டது. மனுவில் விவரங்கள் குழப்பமாக இருப்பதால், மனுவை நிராகரித்து விட்டதாக மாநகராட்சி பதில் அனுப்பியது.
என்ன ஆனது?
இதுகுறித்து, 84 வயதான பகுதிவாசி வரதாச்சாரி கூறியதாவது:
முதல்வருக்கு அனுப்பிய மனுவை அதிகாரிகள் தெளிவாக படித்து பார்க்காமல் பதில் கடிதம் எழுதி உள்ளனர். ஆலந்துார்
நகராட்சியில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் என்ன ஆனது என, தெரியவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘முதல்வர் தனிப்பிரிவு மனுவுக்கு பதில் கடிதம் எழுதியதில் தவறு எங்கு
நடந்தது என, தெரியவில்லை. விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர்.