கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் மயக்க டாக்டர் (அனஸ்தீஷ்யா) பற்றாக்குறையால் முதல்வர் ஜெயலலிதாவின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டம் ஏழை மக்களுக்கு பலனளிக்குமா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து விடுபடவும், உடல்நலத்தைப் பேணிக் காக்கவும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்தால் நோயாளிகள் விரும்பும் இடத்தில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் சிறப்பான சிகிச்சை செய்து கொள்ள இந்த காப்பீடு வழி வகை செய்தது.
விரிவான மருத்துவ
காப்பீட்டுத் திட்டம்
அதையடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி குடும்பத்தினர் அனைவருமே சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் சிகிச்சை செய்து கொள்ளும் விரிவான மருத்துவ திட்டத்தை அமல்படுத்தியது.
மேலும் கொடிய நோய்கள் உட்பட தீப்புண், டயாலிசிஸ், எலும்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் சிறந்த சிகிச்சையைப் பெற முடியும்.
அதே நேரத்தில் பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலேயே அதற்கான சிகிச்சையை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளன. ஒரு சில அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்களில்
டிஜிட்டல் விளம்பரம்
தற்போது சுகாதாரம் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு அலுவலகங்கள், ஆங்காங்கே பெண்கள் கூடும் இடங்களில் டிஜிட்டல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் 30 வயதிற்கு மேல் பரிசோதனை செய்வது அவசியம், சர்க்கரை நோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள அனைவருமே சோதனை செய்து கொள்ள வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் பயனாக பல பகுதிகளில் உள்ள பெண்கள் மருத்துவமனைகள் மூலம் பரிசோதனை செய்து அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஆபத்தான நோய்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ காப்பீட்டு ஊழியர்கள் சரியான வழிகாட்டுதல் வழங்குவதில்லை. இதனால் மருத்துமனை நிர்வாகம் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
நோயாளிகள் அலைகழிப்பு
முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவற்காக கடலூர் அரசு மருத்துவமனை முதல் மாடியில் பெரிய அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் இருந்தும் ஒரு பெண் ஊழியர் மட்டுமே பணியில் உள்ளார். இத்திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் நோ ரெஸ்பான்ஸ்.
நேரடியாக அலுவலகத்திற்கு சென்று காப்பீட்டு மூலம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் கூட, இங்கு 3 மாதமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் ஏராளமானோர் காத்துக் கிடக்கின்றனர். நீங்கள் வேறு மருத்துவமனையை பார்த்துக் கொள்ளுங்கள் என "கூலாக' பதில் வரும்.
நோயாளிகளுக்கு "அட்வைஸ்'
கடலூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக குள் ளஞ்சாவடியைச் சேர்ந்த கோதண்டபாணி மனைவி சொர்ணம் என்பவர் கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையிலேயே உள் நோயாளியாக காத்துக் கிடக்கிறார்.
இவரைப்போன்று இன்னும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, மருத்துவமனை நிர்வாகம் ஏதாவது ஒரு நொண்டி சாக்கைச் சொல்லி தனியார் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது.
இதனால் தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பலர் சிகிச்சை பெறாமல் திரும்புவதோடு, மருத்துவமனைக்கு கிடைக்கும் வருவாயும் கிடைக்காமல் போய் விடுகிறது.
கடலூர் அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்றுக்காக ஒருபுறம் விழுந்து விழுந்து பாடுபடுவதாக கூறிக் கொண்டாலும் இதுபோன்ற குறைபாடுகள் இருந்தால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தேசிய தரச்சான்று கிடைக்குமா என்பது ஐயமே.
இதுகுறித்து மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் சரியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை. இது பற்றி அரசுக்கும் தெரிவித்துள்ளோம். அதற்கு மாற்றாக தற்போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மக்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது' என்றார்.
தமிழகத்தில் உள்ள ஏழை மக்கள் உயிர்க்கொல்லி நோய்களில் இருந்து விடுபடவும், உடல்நலத்தைப் பேணிக் காக்கவும் கலைஞர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வந்தது. இத்திட்டத்தில் மருத்துவர்கள் சான்றிதழ் கொடுத்தால் நோயாளிகள் விரும்பும் இடத்தில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் சிறப்பான சிகிச்சை செய்து கொள்ள இந்த காப்பீடு வழி வகை செய்தது.
விரிவான மருத்துவ
காப்பீட்டுத் திட்டம்
அதையடுத்து ஆட்சிக்கு வந்த அ.தி.மு.க., அரசு முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தைக் கொண்டு வருவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்தது. அதன்படி குடும்பத்தினர் அனைவருமே சிகிச்சை மேற்கொள்ளும் வகையில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வீதம் 4 லட்சம் ரூபாய் மதிப்பில் சிகிச்சை செய்து கொள்ளும் விரிவான மருத்துவ திட்டத்தை அமல்படுத்தியது.
மேலும் கொடிய நோய்கள் உட்பட தீப்புண், டயாலிசிஸ், எலும்பு சம்பந்தப்பட்ட நோய் உள்ளிட்ட பல்வேறு நோய்களுக்கும் இந்த திட்டத்தின் மூலம் சிறந்த சிகிச்சையைப் பெற முடியும்.
அதே நேரத்தில் பெரும்பாலான அறுவை சிகிச்சைகள் அரசு மருத்துவமனைகளிலேயே அதற்கான சிகிச்சையை அளிக்க வகை செய்யப்பட்டுள்ளன. ஒரு சில அறுவை சிகிச்சைகளுக்கு மட்டும் தனியார் மருத்துவமனைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன.
அரசு அலுவலகங்களில்
டிஜிட்டல் விளம்பரம்
தற்போது சுகாதாரம் பற்றி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக அரசு அலுவலகங்கள், ஆங்காங்கே பெண்கள் கூடும் இடங்களில் டிஜிட்டல் விளம்பர பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. பெண்கள் 30 வயதிற்கு மேல் பரிசோதனை செய்வது அவசியம், சர்க்கரை நோய், கர்ப்பப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் போன்றவற்றில் இருந்து காப்பாற்றிக் கொள்ள அனைவருமே சோதனை செய்து கொள்ள வேண்டும் என அந்த விளம்பரத்தில் கூறப்பட்டுள்ளது.
இதன் பயனாக பல பகுதிகளில் உள்ள பெண்கள் மருத்துவமனைகள் மூலம் பரிசோதனை செய்து அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். ஆனால் அவர்களுக்கு ஆபத்தான நோய்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள மருத்துவ காப்பீட்டு ஊழியர்கள் சரியான வழிகாட்டுதல் வழங்குவதில்லை. இதனால் மருத்துமனை நிர்வாகம் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது.
நோயாளிகள் அலைகழிப்பு
முதல்வரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தை செயல்படுத்துவற்காக கடலூர் அரசு மருத்துவமனை முதல் மாடியில் பெரிய அலுவலக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. அங்கு ஏராளமான மேஜை, நாற்காலிகள், கம்ப்யூட்டர்கள் இருந்தும் ஒரு பெண் ஊழியர் மட்டுமே பணியில் உள்ளார். இத்திட்டத்திற்காக கொடுக்கப்பட்ட தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டால் நோ ரெஸ்பான்ஸ்.
நேரடியாக அலுவலகத்திற்கு சென்று காப்பீட்டு மூலம் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்றால் கூட, இங்கு 3 மாதமாக அறுவை சிகிச்சை மேற்கொள்ளாமல் ஏராளமானோர் காத்துக் கிடக்கின்றனர். நீங்கள் வேறு மருத்துவமனையை பார்த்துக் கொள்ளுங்கள் என "கூலாக' பதில் வரும்.
நோயாளிகளுக்கு "அட்வைஸ்'
கடலூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பப்பை அகற்றும் அறுவை சிகிச்சைக்காக குள் ளஞ்சாவடியைச் சேர்ந்த கோதண்டபாணி மனைவி சொர்ணம் என்பவர் கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையிலேயே உள் நோயாளியாக காத்துக் கிடக்கிறார்.
இவரைப்போன்று இன்னும் ஏராளமானோர் சிகிச்சைக்கு வருபவர்களுக்கு, மருத்துவமனை நிர்வாகம் ஏதாவது ஒரு நொண்டி சாக்கைச் சொல்லி தனியார் மருத்துவக் கல்லூரி, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வருகிறது.
இதனால் தலைமை மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள் பலர் சிகிச்சை பெறாமல் திரும்புவதோடு, மருத்துவமனைக்கு கிடைக்கும் வருவாயும் கிடைக்காமல் போய் விடுகிறது.
கடலூர் அரசு மருத்துவமனை தேசிய தரச்சான்றுக்காக ஒருபுறம் விழுந்து விழுந்து பாடுபடுவதாக கூறிக் கொண்டாலும் இதுபோன்ற குறைபாடுகள் இருந்தால் இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் தேசிய தரச்சான்று கிடைக்குமா என்பது ஐயமே.
இதுகுறித்து மருத்துவக் காப்பீட்டுத் திட்ட அதிகாரி ஒருவர் கூறுகையில், "மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறையால் சரியாக அறுவை சிகிச்சை மேற்கொள்ள முடியவில்லை. இது பற்றி அரசுக்கும் தெரிவித்துள்ளோம். அதற்கு மாற்றாக தற்போது ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் மக்கள் அறுவை சிகிச்சை செய்து கொள்ள அனுமதி பெறப்பட்டுள்ளது' என்றார்.