தினமும் 500 கிராம் காய், பழம் சாப்­பி­டுங்கள் சத்­து­ணவு வார விழாவில் டாக்டர் அறி­வுரை

:தினமும், 500 கிராம் புதிய காய்­க­றிகள், பழங்­களை, மூன்று வேளையும் சரி­வி­கித அள­வாக 
உட்­கொள்ள வேண்டும்’ என, சத்­து­ணவு வார விழாவில் மருத்துவர்கள் அறி­வு­றுத்­தினர்.
சென்னை, எழும்பூர் அரசு மகப்­பேறு மருத்­து­வ­ம­னையில், சத்­து­ணவு வார விழா நேற்று கொண்­டா­டப்­பட்­டது. இதில், 200க்கும் பெண்கள் பங்­கேற்­றனர். அவர்­க­ளுக்கு சத்­து­ணவின் அவ­சியம் குறித்து, மருத்துவர்கள் விளக்கம் அளித்­தனர்.
சென்னை மருத்­து­வ­மனை டீன் கன­க­சபை பேசி­ய­தா­வது:
தொற்­று நோய் வராமல் தடுக்க, சத்­து­ணவு முக்­கியம். 
கர்ப்ப காலத்தில் சத்­து­ணவு
அவ­சியம். ரத்த சோகையை தடுக்க தேவை­யான இரும்­
புச்­சத்து, முருங்கைக் கீரை,
முருங்­கைக்காய், எலு­மிச்சை, ஆரஞ்சு, பால் 
சாப்­பி­டு­வதால் கிடைக்கும்.
தினமும், 500 கிராம் காய்­கறி, பழங்­களை சாப்­பி­டு­வது நல்­லது. அதை மூன்று வேளையும், சரி­வி­கித அளவில் சாப்­பிட வேண்டும்.
இவ்­வாறு அவர் 
தெரி­வித்தார்.
‘அரிசி, சர்க்­கரை, உப்பு, எண்ணெய், தயிர் போன்­ற ­வற்றை அதிகம் சாப்­பிட
கூடாது. தினமும், உடற்­
ப­யிற்­சியும் முக்­கியம். தியானம், சரி­யான துாக்கம்
நோய்கள் வரத்தை தடுக்கும்’
எனவும், மருத்துவர்கள் வலி­யு­றுத்­தினர்

கண் தானம் அளிப்போர் எண்­ணிக்கை...அதி­க­ரிக்க வேண்டும்! நங்­க­நல்லுார், சவு­கார்­பேட்டை டாப்

சென்­னையின் மக்கள் தொகைக்கு ஏற்ப கண் தானம் இல்லை என்றும், விழிப்­பு­ணர்வு இல்­லா­ததே இதற்கு காரணம் என்றும், கண் மருத்­து­வர்கள் தெரி­விக்­கின்­றனர். அதே நேரத்தில், நங்­க­நல்லுார் மற்றும் சவு­கார்­பேட்டை பகு­தி­வா­சிகள் கண் தானத்­திற்கு அதி­க­ளவில் முன்­வ­ரு­வ­தாக தெரி­கி­றது.
கடந்த ஆகஸ்ட் 25ம் தேதி முதல் வரும் 8ம் தேதி வரை, தேசிய கண்­தான விழிப்­பு­ணர்வு இரு­வா­ரங்­க­ளாக அனு­ச­ரிக்கப் படு­கி­றது. கண் தானம் பற்­றிய விழிப்­பு­ணர்வை மக்கள் மத்­தியில் 
ஏற்­ப­டுத்­து­வதே இதன் நோக்கம்.
சென்­னையில் தினமும், சரா­ச­ரி­யாக 156 பேர் இறப்­ப­தாக, கடந்த ஜூலை மாத மாந­க­ராட்சி புள்­ளி­வி­வ­ரங்கள் தெரி­விக்­கின்­றன. அதா­வது, ஒவ்­வொரு மாதமும், ஏறத்­தாழ 4,680 பேர் இறக்­கின்­றனர். ஆனால், அதற்கு ஏற்ப கண் தானங்கள் கிடைப்­ப­தில்லை என,சங்­க­ர­நேத்­ரா­லயா கண் வங்கி ஆலோ­ச­கர்கள் விக்ரம் மற்றும் சுப்­பி­ர­ம­ணியம் தெரி­வித்­தனர்.

பேருக்கு உதவும்
இது­கு­றித்து, அவர்கள் கூறி­ய­தா­வது:
கண் தானத்தில், தேசிய அள­வி­லான கணக்­கெ­டுப்பின் படி, தமி­ழகம் முத­லி­டத்தில் உள்­ளது. தேசிய பார்­வை­யி­ழப்பு கட்­டுப்­பாட்டு திட்ட தகவல் படி, 2012 13ம் ஆண்டு மே மாதம், தமி­ழ­கத்தில் தான­மாக பெறப்­பட்ட கண்­களின் எண்­ணிக்கை 8,318. அதற்கு அடுத்த இடத்தில் உள்ள குஜ­ராத்தில் 8,066 கண்கள் தானம் பெறப்­பட்டு உள்­ளன. 7,153 கண்­களை தான­ம­ளித்து ஆந்­திரா மூன்­றா­மி­டத்தில் உள்­ளது.
அதே­நேரம், கண் தான விழிப்­பு­ணர்வில் சென்னை பின்­தங்கித் தான் உள்­ளது.
சென்­னையில் மாதத்­திற்கு 4,680 பேர் இறக்­கின்­றனர். ஆனால், 50க்கும் குறை­வா­ன­வர்­க­ளு­டைய கண்கள் மட்­டுமே தான­மாக கிடைக்­கின்­றன.
சவு­கார்­பேட்டை மற்றும் நங்­க­நல்லுார் பகு­தி­வா­சி­க­ளுக்கு கண்­தான விழிப்­பு­ணர்வு அதி­க­ளவில் உள்­ளது. அந்த பகு­தி­களில் இருந்து, ஒரு மாதத்­திற்கு ஓரி­ரு­வ­ரா­வது கண் தானம் அளிக்­கின்­றனர். அவர்­க­ளிலும், வட­மா­நி­லத்­த­வர்கள் மத்­தியில் கண்­தான விழிப்­பு­ணர்வு நிறை­யவே உள்­ளது.
இறந்­த­வரின் உற­வி­னர்­க­ளுடன் பேசி, கண் தானம் பெற முயற்­சிகள் மேற்­கொள்வோம். ஒரு­வரின் இறப்பு அவ­ரு­டைய குடும்­பத்­திற்கு பேரி­ழப்பு தான். ஆனால் அவ­ரது கண்கள் தான­மாக தரப்­படும் பட்­சத்தில், இருண்ட உலகில் தவிக்கும் நான்கு பேருக்கு ஒளி ஏற்­றிய பெருமை கிடைக்கும்.
இவ்­வாறு அவர்கள் கூறினர்.
கண் தானம் கொடுப்­பது எப்­படி?
ஒருவர் இறந்து ஆறு மணி நேரம் வரை கண்­களை தான­மாக கொடுக்­கலாம்.
தற்­கொலை தவிர்த்து விபத்து உள்­ளிட்ட மற்ற சாதா­ரண மர­ணங்கள் எங்கு நடந்­தாலும், அருகில் உள்ள அரசு மருத்­து­வ­ம­னை­களில் தகவல் அளிக்­கலாம் அல்­லது ‘1919’ என்ற தொலை­பேசி எண்­ணிலும் தகவல் அளிக்­கலாம்
தொழில்­நுட்ப முன்­னேற்­றங்­களால், தற்­போது, ஒருவர் கண்­தா­ன­ம­ளித்தால் நான்கு பேருக்கு பார்வை கிடைக்கும்
ரத்த அழுத்த நோய் மற்றும் சர்க்­கரை நோயால் பாதிக்­கப்­பட்­ட­வர்கள், கண்­புரை அறுவை சிகிச்சை செய்து கொண்­ட­வர்கள், கண்­ணாடி அணிந்­த­வர்­களும் கண் தானம் செய்­யலாம்
பிறந்த குழந்தை முதல் 100 வயது வரை­யி­லா­ன­வர்­களின் கண்­களும் பயன்­படும்
இறந்­தவர், ரத்தம் மற்றும் மூளை 
புற்­று­நோயால் பாதிக்­கப்­பட்­டி­ருந்­தாலோ, காசநோய், மலே­ரியா, மஞ்சள் காமாலை மற்றும் எச்.ஐ.வி.,யால் பாதிக்­கப்­பட்டு இறந்­தி­ருந்­தாலோ கண் தானம் அளிக்க முடி­யாது
தற்­கொலை செய்­பவர் எந்த நேரத்தில் இறந்தார் என்­பதை சரி­யாக கணிக்க முடி­யாது என்­பதால் அவ­ரு­டைய கண்­களை பயன்­
ப­டுத்த முடி­யாது

3,000 விநாயகர் சிலைகள்

கோவை செல்வபுரம் சேத்துமாவாய்க்கால் பகுதியில் 3,000 விநாயகர் சிலைகளை, ஓடைக்கல்மாவு, கிழங்குமாவு, காகிதக்கூலில் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதற்காக, கைவினைக்கலைஞர்கள் சுற்றுப்புற சூழலுக்கும், நீர்நிலைகளையும் மாசுபடுத்தாத வகையில், இயற்கையான பொருட்களை பயன்படுத்தியுள்ளனர். அதிகபட்சம் 14 அடி உயரத்துக்கு சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளது. சித்தி, புத்தி, கல்வி, மங்கள, தாமரை, மான்,முயல், நந்தி, சிங்கம் உள்ளிட்ட 60 வகைகளில் வித்தியாசமான டிசைன்களிலும் வண்ணங்களிலும், விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டுள்ளன. மூன்றரை அடி உயரத்துக்கு மேல் 350 விநாயகர் சிலையும், ஒன்றரை அடியிலிருந்து மூன்றரை அடி வரை 2,600 சிலைகளும் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சிலை தயாரிக்கும் பகுதியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

போத்தனூரில் முடிந்தது "யார்டு' பணி... எட்டாக்கனியாகும் எட்டு ரயில்கள் : கோவையை புறக்கணிப்பது தொடர்கிறது!

போத்தனூர் "யார்டு' சீரமைப்புப் பணி முடிவடைந்தபின்னும், 8 ரயில்கள் கோவைக்கு வராமல் கேரளா செல்கின்றன.கோவை வழியாக கேரளாவுக்கு இயக்கப்படும் ரயில்களில், 13 ரயில்கள் கோவை ரயில்வே ஸ்டேஷனுக்கு வராமல், போத்தனூர் வழியாக இயக்கப்பட்டு வந்தன. வடகோவை-இருகூர் இடையில் இருவழிப்பாதை இல்லாததைக் காரணம் காட்டி, கோவைக்கு வந்தால் "சிக்னல்' கிடைக்காமல் மிகவும் தாமதமாகும் என்பதன் காரணமாகவே அந்த ரயில்கள் அனைத்தும், இருகூர்-போத்தனூர் வழியாக கேரளாவுக்குச் சென்றன. 

வடகோவை-இருகூர் இடையிலான இருவழிப்பாதை அமைக்கும் பணி, கடந்த 2010 ஆகஸ்ட்டிலேயே முடிவடைந்து விட்டது.அதன்பின்னும், இந்த ரயில்கள் அனைத்தும் கோவைக்குள் திருப்பப்படாமல், போத்தனூர் வழியாகவே இயக்கப்பட்டன. இதனைக் கண்டித்து, கோவை ரயில்வே போராட்டக்குழு உருவாக்கப்பட்டது; இந்த குழுவினர் எடுத்த பல்வேறு முயற்சிகளின் காரணமாக, இதுவரையிலும் 4 ரயில்கள் மட்டும் கோவைக்குத் திருப்பி விடப்பட்டுள்ளன. ஐந்தாவது ரயிலாக, மங்களூரு- புதுச்சேரி வாராந்திர ரயில் (வண்டி எண்:16857/58), வரும் 7ம் தேதியிலிருந்து கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக இயக்கப்படுவதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த ஏப்ரலில், கோவைக்கு வந்த தென்னக ரயில்வே பொதுமேலாளர் ராகேஷ் மிஸ்ரா, "போத்தனூரில் "யார்டு' பணிகள் முடிந்த பின்பே, மீதமுள்ள ரயில்களை கோவைக்கு திருப்புவது பற்றி முடிவு எடுக்க முடியும்,' என்றார். அதன்படி, கடந்த மாதம் 25ம் தேதியன்றே இந்த பணிகள் முடிவடைந்தன. ஆனால், இன்னும் 8 ரயில்களை கோவைக்குத் திருப்புவது பற்றி, ரயில்வே நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காமல் உள்ளது. தற்போது, திருப்பி விடப்பட்டுள்ள 5 ரயில்களில் சென்னை-ஆழப்புழா ரயில் மட்டுமே, தினசரி ரயிலாகும். திருவனந்தபுரம்-பிலாஸ்பூர், மும்பை-திருவனந்தபுரம், மங்களூரு-புதுச்சேரி (வழி:சேலம்), மங்களூரு-புதுச்சேரி (வழி:திருச்சி) ஆகிய 4 ரயில்களும், வாராந்திர ரயில்களாகும். இவற்றில், யஷ்வந்த்பூர் -கண்ணனூர் இடையே இயக்கப்படும் தினசரி ரயில் கோவைக்குத் திருப்பப்பட்டால், பெங்களூருவுக்கு "ஆம்னி' பஸ்களில் அநியாயக்கட்டணம் கொடுத்து, ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் பல ஆயிரும் பேரும் தப்பிப்பார்கள்.சென்னைக்கும் தினமும் கூடுதலாக 3 ரயில்கள் கிடைக்கும் என்பதால், சென்னைக்கு இயக்கப்படும் ஆம்னி பஸ்களின் எண்ணிக்கையும் பாதியாகக் குறையும்; ஆனால், போத்தனூர் "யார்டு' பணி முடிவடைந்த பின்னும், இந்த ரயில்களைத் திருப்புவது பற்றி, ரயில்வே நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பது, கோவை மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், "ஆம்னி' பஸ் உரிமையாளர்களுக்கும், ரயில்வே அதிகாரிகளுக்கும் இடையிலான "ரகசிய ஒப்பந்தம்' காரணமா என்ற கேள்வி, கோவை மக்களிடம் எழுந்துள்ளது; ரயில்வே அதிகாரிகளின் அடுத்த கட்ட நடவடிக்கையே இதற்கு விடை கொடுக்கும்.
"டாட்டா' காட்டும் எட்டு இவைதான்!
1.யஷ்வந்த்பூர்-கண்ணனூர் எக்ஸ்பிரஸ் (தினசரி)
2.சென்னை-மங்களூரு எக்ஸ்பிரஸ் (தினசரி)
3.ஹூப்ளி-கொச்சுவேலி எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
4.சென்னை-திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
5.பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வாரமிருமுறை)
6.பெங்களூரு-எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒரு முறை)
7.சென்னை-திருவனந்தபுரம் மெயில் (தினசரி)
8.சென்னை-மங்களூரு மெயில் (தினசரி) 
இவற்றில், சென்னை-திருவனந்தபுரம் மெயில் (வண்டி எண்: 12623/24) போத்தனூரிலும் நிற்பதில்லை; ஈரோட்டுக்கு அடுத்ததாக பாலக்காட்டில் மட்டுமே நிறுத்தப்படுகிறது. இடையிலுள்ள கோவை, திருப்பூர் என்ற இரு பெரும் நகரங்களுக்கும் இந்த ரயில் "டாட்டா' காட்டிச் செல்கிறது

தாமரைக்குளத்தில் மண் அள்ள எதிர்ப்பு :மாவட்ட நிர்வாகத்துக்கு எச்சரிக்கை

அவிநாசியில் உள்ள தாமரைக்குளத்தில், தினமும் 200க்கும் மேற்பட்ட லோடு மண் அள்ளப்படுகிறது. இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.திருப்பூர் மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற சிவாலயமான அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் தல வரலாற்றில் தொடர்புடையது தாமரைக்குளம். 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இக்குளத்தில், சில நாட்களாக, தினமும் 200 லோடு மண் அள்ளப்படுகிறது. நான்கு மற்றும் ஆறு வழிச்சாலை பணிக்காக, ஐ.வி. ஆர்.சி.எல்., நிறுவன லாரிகள் மூலம், மண் அள்ளப்படுகிறது.கடந்தாண்டு, தாமரைக்குளத்தில் 

ஆயிரக்கணக்கான லோடு மண் அள்ளியபோது, பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், சேவூர் அருகே கிளாகுளத்துக்கு சென்று, மண் அள்ளப்பட்டது. தற்போது மீண் டும் தாமரைக்குளத்தில் மண் அள்ளப்படுகிறது. இதற்கு, விவசாயிகள், பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கலெக்டர் அளித்த விதிமுறைகளை மீறி, மண் அள்ளிச் செல்வதாக, விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.அவிநாசி ஒன்றிய அகில இந்திய விவசாயிகள் சங்க செயலாளர் வெங்கடாசலம் கூறியதாவது:தாமரைக்குளத்தில் தினமும் நூற்றுக்
கணக்கான லோடு மண் அள்ளுவதால், குளத்தில் பல இடங்கள் மிக ஆழமாகி விட்டது. களிமண், செம்மண், வண்டல் மண் என பல வகையான மண் உள்ளது. வண்டல் மண்ணையும் தாண்டி, கிணறு தோண்டும்போது கிடைக்கும் மண் வருகிறது. அதையும் விட்டு வைக்காமல் அள்ளிச் செல்லப்படுகிறது.குளத்தை ஆழப்படுத்தினால், தண்ணீர் தேங்கி நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அதிகாரிகள் மழுப்புகின்றனர். உண்மை அதுவல்ல; வண்டல் மண் இருந்தால், நீர் பரவுவதற்கு, அவை, மண்ணை ஊடுருவி பல இடங்களுக்குச் செல்ல எளிதாக இருக்கும். பாறை அடுக்கு வந்து, அதில் தண்ணீர் தேங்குவதால் எவ்வித பயனும் கிடையாது. மண் வளம் இருந்தால் மட்டுமே நிலத்தடி நீர் மேம்படும். இதுகுறித்து அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்களை அழைத்து கூட்டம் நடத்தி, அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும், என்றார்.பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் (நொய்யல்) குமாரசாமியிடம் கேட்ட போது, ""ஆறுவழிச்சாலை பணிக்காக, அவிநாசி தாமரைக்குளத்தில் மண் அள்ள, ஐ.வி.ஆர்.சி.எல்., நிறுவனத்துக்கு கலெக்டர் அனுமதி அளித்துள் ளார். மூன்று மீ., ஆழத்துக்கு மட்டுமே மண் எடுக்க வேண்டும். பாறையடுக்கு வரை எடுக்கக் கூடாது. மரங்களை சேதப்படுத்தக்கூடாது என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. நாங்களும் கண்காணித்து வருகிறோம். குளத்தை ஆழப்படுத்துவதால், தண்ணீர் தேங்கி, நிலத்தடி நீர் மட்டம் உயர வாய்ப்புள்ளது,'' என்றார்.விவசாயிகள் கூறியதாவது:தாமரைக்குளத்தில் தண்ணீர் நிரம்பினால், வெளியேறுவதற்கு வழி கிடையாது. கரை உடைந்து, ஊருக்குள் வெள்ளம் புகுந்து விடும். இது, அதிகாரிகளுக்கு தெரிந்திருந்தும், மண் அள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது. குளத்துக்கு மிக அருகில் அவிநாசி
லிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. மழை பெய்து, குளம் நிரம்பினால், கோவில் பாதிக்கப்படும்.குளத்தில் பரவலாக நான்கைந்து மீ., ஆழத்துக்கு, ராட்சத பொக்லைன் இயந்திரங்களை கொண்டு இரவு, பகலாக மண் அள்ளப்படுகிறது. தாமரைக்குளத்தில் மண் அள்ளுவதற்கு உடனே தடை விதிக்க, கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும். மண் அள்ளுவது தொடர்ந்தால், லாரிகளை சிறைபிடித்து போராட்டம் நடத்துவோம், என்றனர்

இரண்டாம் பருவ இலவச பாட புத்தகங்கள் தயார் :3.72 லட்சம் மாணவர்களுக்கு வழங்க ஏற்பாடு

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மூன்று லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கான இரண்டாம் பருவப் பாட புத்தகங்கள் விரைவில் வழங்கப்பட உள்ளன.கல்வியில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை நீக்கும் பொருட்டு தமிழக அரசு கடந்த 2010ம் ஆண்டு முதல் மற்றும் ஆறாம் வகுப்பிற்கு சமச்சீர் பாட திட்டத்தை அறிமுகப்படுத்தியது. 
2011ம் ஆண்டு முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 10ம் வகுப்பு வரை சமச்சீர் பாட திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து மாணவர்களின் புத்தகச் சுமையைக் குறைக்கும் பொருட்டு கடந்த 2012-13 கல்வி ஆண்டு முதல் பருவ (செமஸ்டர்) முறையை அறிமுகப்படுத்தியதோடு, ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் பாட புத்தகம் இலவசமாக வழங்கப்பட்டது.முப்பருவ முறை இந்த கல்வி ஆண்டு முதல் 9ம் வகுப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஒன்று முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான முதல் பருவ புத்தகங்கள் ஜூன் மாதம் 10ம் தேதி பள்ளி திறந்ததும் இலவசமாக வழங்கப்பட்டன. இவர்களுக்கு வரும் 12ம் தேதி முதல் 21ம் தேதி வரை முதல் பருவத் தேர்வு நடைபெறவுள்ளது. தேர்வு முடிந்து 22ம் தேதி முதல் அக்டோபர் 2ம் தேதி வரை விடுமுறை விடப்படுகிறது.முதல் பருவத் தேர்வு முடிந்து அக்டோபர் 3ம் தேதி பள்ளிகள் திறந்ததும், மாணவர்களுக்கு இரண்டாம் பருவத்திற்கான பாட புத்தகங்கள் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு பாடநூல் நிறுவனம், ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தேவையான பாட புத்தகங்களை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதனை தற்போது ஒவ்வொரு பள்ளிகளுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு வருகிறது.அதன்படி கடலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மூன்று லட்சத்து 72 ஆயிரத்து 549 மாணவ, மாணவிகளுக்குத் தேவையான இரண்டாம் பருவ பாட புத்தகங்கள், வழங்கப்பட உள்ளது.இதற்காக மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலகத்திற்கு இரண்டு லட்சத்து 60 ஆயிரத்து 100 "செட்' புத்தகங்களும் (ஒன்றாம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை), மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்திற்கு ஒரு லட்சத்து 12 ஆயிரத்து 449 "செட்' புத்தகங்கள் (6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை) வந்துள்ளது.தமிழ்நாடு பாடநூல் கழகங்களில் இருந்து வந்துள்ள இரண்டாம் பருவ புத்தகங்களை, பள்ளிகளுக்கு பிரித்து அனுப்பும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது. 
இந்த பணிகளை வரும் 12ம் தேதிக்குள் முடித்து, தேர்வு முடிந்து விடுமுறைக்கு பிறகு பள்ளி திறந்ததும் அனைத்து மாணவர்களுக்கும் வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது

இயற்கை அங்கக உரமிடுவதால் மகசூல் அதிகரிப்பு : சவாலில் சாதனை படைத்த விவசாயிகள்

இயற்கை உரம் கிடைக்காமல் திண்டாடும் விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக இயற்கையான அங்கக உரம் கிடைத்துள்ளது. கடலில் வளர்க்கப்படும் செயற்கை பாசியில் இருந்து இந்த உரம் தயாரிக்கப் படுகிறது.நாட்டில் மக்கள் பலர் அரிசியையே முக்கிய உணவாக கொண்டு வாழ்கின்றனர். நவீன தொழில் நுட்பங்கள் வளர்ந்துள்ள கால கட்டத்தில் உணவு உற்பத்தியை பெருக்குவது விவசாயிகளுக்கு சவாலாக அமைந்துள்ளது. ரசாயன உரங்களை தொடர்ந்து பயன்படுத்துவதால் நிலத்தின் வளம் சீர்கேடு அடைந்துள்ளது. இதனை சரிசெய்ய இயற்கை உரங்களான தொழு உரம், பசுந்தாள் உரங்கள் மற்றும் இதர வேளாண் கழிவுப் பொருட்கள் கிடைக்காத நிலை உள்ளது.
புதிய அங்கக உரம் 
இயற்கை உரங்கள் காணாமல் போனதால், விவசாயிகளுக்கு இயற்கை யாக கிடைக்கும் வகையில் ஒருஅங்கக உரம் கண்டறியப்பட்டுள்ளது. கடலில் வளரும் செயற்கை பாசியில் இருந்து முழுமையான அங்கக உரம் தயாரிக்கப்படுகிறது.இந்த உரத்தை மத்திய அறிவியல் தொழில் ஆராய்ச்சி மையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய உப்பு மற்றும் கடல்சார்ந்த ரசாயன ஆராய்ச்சி மையம், கண்டறிந்து உலக காப்புரிமை பெற்றுள்ளது.இந்த கண்டுபிடிப்பை பல்வேறு பயிர்களில், பல்வேறு மண் வகைகளில் 20 மாநிலங்களில் உள்ள வேளாண் ஆராய்ச்சி நிலை யங்களில் பரிசோதித்தனர். இதன் மூலம் அனைத்து விதமான பயிர்களிலும் அதிக மகசூல் கிடைப்பதுடன், தரம் உயர்ந்த விளைபொருள் உற்பத்தியாவதும் நிரூபிக்கப் பட்டது.
"ஜெல்" வடிவில் உரம் 
இந்த கடற்பாசி உரத்தொழில் நுட்பத்தை ஸ்கைவின் பயோ டெக் என்ற நிறுவனம் காப்புரிமை பெற்று, உரத்தின் வீரி யத்தை அதிகப்படுத்தும் வகையில் நெல்பயிருக்கு உகந்த அங்கக இடுபொருளை உற்பத்தி செய்கிறது.இதற்காக அங்கக மற்றும் பயோ பொருட்களை ஆராய்ச்சியின் அடிப்படையில் உள்ளடக்கிய "டீய்ப் ஜெல்' என்ற புதிய ஜெல் வடிவிலான இடுபொருளை வடிவமைத்துள்ளது.கூடுதல் நன்மைகள் இந்த அங்கக உரத்தில், சுற்றுப் புறச் சூழலை மாசுபடுத்தாத அனைத்து ஊட்டங்களும் இடம் பெற்றுள்ளது. பயிர்களின் வேர்கள் ஆழமாகவும், அடர்ந்தும் வளர்வதால் ஊட்டச் சத்துக்கள் மற்றும் தண்ணீர் அதிகளவில் உள்கிரகிக்கப்படுகிறது.உபயோகிக்கும் முறைஒரு ஏக்கருக்கு டீய்ப் ஜெல் 5 கிலோ மற்றும் மக்கிய தொழு உரத்தை 20 கிலோ மணலுடன் நன்கு கலந்து வயல்களில் சீராக தண்ணீர் (2.5 செ.மீ.,) வைத்து, நடவு செய்த 10 நாட்களுக்குள் இட வேண்டும். இத்துடன் 10 கிலோ சன்மேக் நுண்ணூட்டத்தையும் கலந்து இட வேண்டும்.சாதனை விவசாயி:விக்கிரவாண்டி அருகே பயிர் சாகுபடிக்கு சவாலாக விளங்கிய தனது நிலத்தில் நெல் பயிரிட்டு, அமோக விளைச்சலை ஏற்படுத்தியுள்ளார். விக்கிரவாண்டி அடுத்த தொரவி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராதாகிருஷ்ணன், தனது நிலத்தில், புதிய முயற்சியாக இயற்கை அங்கக உரத்தைப் பயன்படுத்தி ஏ.எஸ்.-36 ரக நெல் பயிரிட்டார். நடவு செய்த 10 நாட்களில் ஒரு ஏக்கருக்கு 8 கிலோ பயோ சக்தி குருணை மற்றும் 10 கிலோ மைக்ரோ கோல்டு நுண்ணூட்ட உரத்தை கலந்து நெல் வயலில் பயன்படுத்தினார்.அடுத்த சில நாட்களில் நெற்பயிர் கரும்பச்சை நிறத் துடன், அதிக தூர்களுடன் செழித்து வளர்ந்தது. பரீட்சார்த்த முறையில் ஒரு ஏக்கரில் நெல் சாகுபடி செய்த அவர், இதனைக் கண்டு ஆச்சரியமடைந்தார். மேலும் தனது 9 ஏக்கரிலும் நெல் பயிரை தெம் புடன் சாகுபடி செய்துள்ளார்.மணக்கும் மல்லிகை பனையபுரம் அடுத்த விஸ்வரெட்டிப்பாளையம் கிராமத்தில் ஆம்ஸ்ட்ராங், முருகன், வெங்கடேசன், கிருஷ்ணமூர்த்தி, பாலு, நாராயணன் உள்ளிட்ட விவசாயிகள் நீண்ட காலமாக இயற்கை அங்கக உரங்களை பயன்படுத்தி பூக்கள் பயிரிட்டுள்ளனர். இதில் கூடுதல் மகசூல் மற்றும் அதிக லாபம் கிடைக்கிறது என தெரிவித்துள்ளனர்